பிரமாண பத்திர உறுதிமொழியை மீறி கஞ்சா விற்ற பெண்ணுக்கு 142 நாள் சிறை துணை கமிஷனர் உத்தரவு
" alt="" aria-hidden="true" />

 

திரு.வி.க. நகர்,

 

சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் 9-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வேலழகி(வயது 57). பிரபல கஞ்சா வியாபாரியான, இவர் கஞ்சா விற்ற வழக்கில் பலமுறை சிறை சென்று வந்துள்ளார்.

 

இவர், கடந்த மாதம் 20-ந் தேதி புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா மற்றும் பேசின் பிரிட்ஜ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் முன்னிலையில் ஆஜராகி அடுத்த 6 மாதத்துக்கு குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்து இருந்தார்.


 


 

ஆனால் 25 நாட்கள் கடந்த நிலையில் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வேலழகியை பேசின்பிரிட்ஜ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

பிரமாண பத்திர உறுதியை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட வேலழகியை அடுத்த 142 நாட்கள் ஜாமீனில் வர முடியாத வகையில் சிறையில் அடைக்க துணை கமிஷனர் உத்தரவிட்டார்.

 

அதேபோல் பிரமாண பத்திர உறுதி மொழியை மீறிய புளியந்தோப்பு காந்தி நகரைச் சேர்ந்த சசிகுமார்(21) என்பவரை 333 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவிட்டார்.

Popular posts
வாணியம்பாடியில் சுமார் அரை மணி நேரம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால்
Image
அரூரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணியில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காவல்துறை மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கும் தன்னார்வலர்கள்
Image
அரூரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் உட்பட்டகொரோனா நோய் தடுப்பு
Image
பேராபத்தை விளைவிக்கும் வாட்ஸ் அப் வதந்திகளை.. பார்வேடு பண்ணீறாதீங்க
Image